லைக்கா ஞானம் அறக்கட்டளையினால், வவுனியா சின்ன அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லைக்கா ஞானம் கிராமத்தின் 150 வீடுகள், பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி. ஞானாம்பிகை அல்லிராஜா, நிறுவுனர் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோர் இணைந்து பயனாளிகளிடம் தற்போது வீடுகளைக் கையளித்தனர்.
அவர்களைத் தவிர பிரதம விருந்தினர்கள், விசேட அழைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டு, மக்களுக்கான வீடுகளைக் கையளித்னர். குறித்த 150 வீடுகளும் சுமார் 23 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
லைக்காக ஞானம் அறக்கட்டளையானது வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(2ஆம் இணைப்பு)
லைக்கா ஞானம் அறக்கட்டளையினால், வவுனியா சின்ன அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லைக்கா ஞானம் கிராமத்தின் 150 வீடுகள், பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக, லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி. ஞானாம்பிகை அல்லிராஜா, நிறுவுனர் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா உட்பட பிரதம விருந்தினர்கள், விசேட அழைப்பாளர்கள் என சகலரும் அங்கு சென்றுள்ளனர்.
சுமார் 23 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, 150 வீடுகளைக் கொண்ட லைக்கா கிராமத்தை கைளிக்கும் நிகழ்வினை முன்னிட்டு சின்ன அடம்பன் மற்றும் பரிசங்குளம் ஆகிய பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன.
லைக்கா ஞானம் அறக்கட்டளையானது வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜா, ஸ்தாபகத் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோரின் பரந்துபட்ட மனிதாபிமான செயற்பாடுகளில் ஒன்றாகவே, இந்த கிராமம் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு பல தாசாப்த காலமாக பூந்தோட்டம் உள்ளிட்ட முகாம்களில், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்களுக்கே, லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் இந்த வீடுகள் வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் கடந்த 25 ஆண்டு காலமாக அடிப்படை வசதிகளற்ற நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்களின் வீட்டுத் தேவையினை பூர்த்தி செய்து வைக்கும் வகையில் லைக்கா ஞானம் அறக்கட்டளை, சின்ன அடம்பன் பகுதியில் 150 வீடுகள் அடங்கிய இந்த புதிய கிராமத்தை அமைத்துள்ளது.
குறித்த கிராமத்தில் சிறுவர்களுக்கான பூங்கா, இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம், சமூக அபிவிருத்தி மையம், ஆன்மீக வணக்கஸ்தலங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான சகல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
லைக்கா ஞானம் கிராமத்தின் 150 வீடுகளை கையளிப்பதற்கான ஆயத்தங்கள் பூர்த்தி
அத்தோடு, பயனாளிகளும் விருந்தினர்களும் தற்போது அவ்விடத்திற்கு வருகை தந்துகொண்டிருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
லைக்காக ஞானம் அறக்கட்டளையானது வடக்கு கிழக்கில் பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
தற்போது, கடந்த கால அனர்த்தங்களினால் வாழ்விடங்களை இழந்தவர்களுக்கு வீடுகளை இலவசமாக வழங்கவுள்ளமையானது, லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பணிகளில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளதென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.